
கோலாலம்பூர், ஜூன் 19 – கடந்த 2015 ஆம் ஆண்டில், 2,590 ரிங்கிட்டாக இருந்த மலேசிய தொழிலாளர்களின் சராசரி ஊதியம், கடந்த 2022 ஆம் ஆண்டில் 3,332 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது என்றும், இது 3.7 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது என்றும் நேற்று மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் மொத்த சம்பளம், 5.4 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்துள்ளதென்றும், 2015 இல் 245.8 பில்லியனிலிருந்து 2022 இல் 354.9 பில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் மலேசியாவின் தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின், கூறியுள்ளார்.
மலேசிய வணிக நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 10 மில்லியன் தொழிலாளர்களைப் பணியமர்த்யுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையில், பணியாளர் வேலைவாய்ப்புக்கான அனைத்து முதலாளி செலவீனங்களையும் உள்ளடக்கிய மொத்த தொழிலாளர் செலவுகள் 2022 இல் 71.8 பில்லியனாக உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.