
புத்ராஜெயா, மீது 14- வரும், மே 18-ஆம் தேதியன்று, சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, மலேசிய அருங்காட்சியகத் துறையின் (Jabatan Muzium Malaysia ) கீழ் உள்ள 19 அருங்காட்சியகங்களும், பொதுமக்களுக்காக இலவசமாகத் திறந்திருக்கும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.
இவற்றில், மலேசியாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களான தேசிய அருங்காட்சியகம், செப்பாங்கில் அமைந்திருக்கும் தேசிய ஆட்டோமொபைல் அருங்காட்சியகம், கெடா புஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் மலாக்காவிலிருக்கும் மலேசிய கட்டிடக்கலை அருங்காட்சியகம் ஆகியவையும் அடங்கும்.
மேலும், பொதுமக்கள் மலேசியாவின் வரலாறு, கலாச்சார பன்முகத்தன்மையை அறிந்துக்கொள்ளவும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும், இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஆரோன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மலேசிய அருங்காட்சியகத் துறையின் அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தை ஒன்றாகக் கொண்டாடுவோம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்