
பாரிட் புந்தார், ஜூன் 17 – மீன்பிடி படகின் இயந்திரம் வெடித்ததில் தீக்காயத்திற்குள்ளான படகு ஓட்டுனர் மரணம் அடைந்தார். இன்று காலை மணி 7.50 அளவில நிகழ்ந்த இந்த சம்பத்தின்போது தனது உடலில் தீப்பற்றிய நிலையில் கடலில் குதித்த 33 வயதுடைய Cheah Chai Pun என்ற அந்த படகு ஓட்டுனரின் உடல் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து இரு கடல் மைல்களுக்கு அப்பால் அவரது உடல் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
படகு வெடித்தவுடன் தாமும் தனது நண்பரும்கூட கடலில் குதித்ததாகவும், அதனைத் தொடர்ந்து சியாவும் கடலில் குதித்தார். அதன் பின் அவர் கடலில் காணாமல் போனதாக முகமட் ஹரிஸ் என்ற மீனவர் கூறினார். சியா கடலில் குதித்த பிறகு அவரை மீண்டும் பார்க்கவில்லை. அரை மணி நேரம் கடலில் மிதந்து கொண்டிருந்த எங்களை அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் மீட்டனர் என Tanjung Piandang படகுத்துறையில் முகமட் ஹரிஸ் தெரிவித்தார்.