Latestமலேசியா

யாசி, கலைஞர்களுக்கான விருதளிப்பு விழா மே 31 ஆம்தேதி கோலாகலமாக நடைபெறும் 6 பிரிவுகளுக்கு பொதுமக்கள் வாக்களிப்பு

கோலாலம்பூர், மே 20 – உள்நாட்டு கலைஞர்களை கௌரவித்து விருதளிக்கும் வகையில் ம.இ.காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் யாசி விருதளிப்பு நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் இம்மாதம் மே 31ஆம் தேதி செந்தூல் HGH மாநாட்டு மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

இவற்றில் ஆறு பிரிவுகளுக்கான விருதுகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் மே 30 ஆம்தேதிவரை இதற்கான வாக்களிப்பு நடைபெறும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரிவில் பிரபல ஆண் தொகுப்பாளர் , பிரபல பெண் தொகுப்பாளர் ,சிறந்த சமூக ஊடக விருதுக்கான சாதனை விருது உட்பட ஆறு பிரிவுகளுக்கு பொதுமக்கள் வாக்களிக்கலாம் .

மொத்தம் 48 பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு யாசி விருது வழங்கப்படும்.

உள்நாட்டு கலைஞர்களை சிறப்பிக்கும் இந்த விருதளிப்பு நிகழ்வுக்கு தொடக்கப் புள்ளியாக திகழ்ந்தவர் ம.இ.காவின் முன்னாள் தேசிய தலைவரான மறைந்த துன் டாக்டர் சாமிவேலு என நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன் தெரிவித்தார்.

2023 மற்றும் 2024 இல் வெளிவந்த மலேசிய சினிமாத்துறை, உள்ளூர் தொலைக்காட்சி தயாரிப்புக்கள், வானொளி , மேடை நாடகம், இசை உட்பட 48 பிரிவுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக நேற்று டத்தோஸ்ரீ சரவணன் வழங்கிய விளக்கக் கூட்டத்தில் டத்தோ வி.கே.கே தியாகராஜன் உட்பட பல கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

யாசி விருதளிப்பு விழாவுக்கான ஏற்பாட்டு ஆதரவாளர்களும் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டனர்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பிரபல மண்ணின் மைந்தரான
டாக்கி அவர்களுக்கு துன் சாமிவேலு அவர்களின் பெயரில் கலைச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல ஆண்டுகாலமாக டாக்கி ஆற்றிவரும் கலைச்சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!