Latestமலேசியா

ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற வர்த்தக மண்டலப் பகுதியில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடை கஞ்சா பறிமுதல்

ரந்தாவ் பஞ்சாங், ஜூன் 16 – ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற மண்டலப் பகுதியில் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தது. அந்த பகுதியில் மே 27 ஆம் தேதி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சூட் கேஸ் ஒன்றில் 14.398 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செயப்பட்டதாக கிளந்தான் சுங்கத்துறை இயக்குனர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லாங் தெரிவித்தார். அந்த பேக்கில் கஞ்சா பூக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 10 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் இருப்பது சோதனையில் தெரியவந்ததாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார். அதே இடத்தில் மற்றொரு பையை எடுத்துச் சென்ற தாய்லாந்து நாட்டவரும் சோதனை செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் சுங்கை கோலோக் வழியாக கடத்தல் பாதையைப் பயன்படுத்தி, ஒரு சட்டவிரோத தளம் வழியாக நாட்டிற்குள் நுழைந்து, தீர்வையற்ற மண்டலம் வழியாக வெளியேறியது தெரியவந்தது. 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39 பி பிரிவின் கீழ் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய கடத்தல் நடவடிக்கைகள் நாட்டிற்கு வருமான இழப்பை ஏற்படுத்துவதோடு , தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நல்வாழ்விற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக வான் ஜமால் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!