Latestமலேசியா

‘ராஜினாமா கடிதத்தை நான் எழுதவில்லை’- நூருல் இசாவின் கூற்றை ரஃபிஸி மறுக்கிறார்

பெட்டாலிங் ஜெயா, மே 23 – பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்காக ராஜினாமா கடிதத்தைத் தயார் செய்ததாக நூருல் இசா எழுப்பிய குற்றச்சாட்டை ரஃபிஸி ரம்லி முழுமையாக மறுத்துள்ளார்.

பிகேஆர் துணைத் தலைவர் பதவி பிரச்சாரம் குறித்து, தான் மக்களைச் சந்திக்க நான்கு நாட்கள் விடுப்பு மட்டுமே எடுத்ததாகவும் மீண்டும் அமைச்சர் பணிகளைத் தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஃபிஸிக்கு எதிராக துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நூருல் இசா, பொருளாதார அமைச்சர் பதவியைப் போலவே பி.கே.ஆர். துணைத் தலைவர் பதவியையும் ரஃபிஸியால் தக்க வைக்க முடியாது என்ற கூற்றை அறிக்கையொன்றில் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, இக்கூற்றுகள் அனைத்தும் முற்றிலும் தவறு என்றும், தமது பணிகளைத் தாம் செவ்வனே ஆற்றி வருவதாகவும் ரபிசி குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!