
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் மற்றும் மஹிமா எனப்படும் மலேசிய இந்து கோவில்கள் மற்றும் அமைப்புகள் பேரவையின் ஆலோசகருமான தான் ஸ்ரீ ஆர். நடராஜா, லாபுவான் திருமுருகன் கோயிலுக்கு அண்மையில் ஒரு நாள் சிறப்பு வருகை புரிந்தார்.
கோயில் தலைவர் சுப்ரமணியம் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் லாபுவானில் நடைபெற்ற அவ்விழாவில், மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமாரும் கலந்துகொண்டார்.
இவ்வருகையின் போது கோயிலின் வளர்ச்சி பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஆதரிக்க தான் ஸ்ரீ நடராஜா 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்கினார்.
கோயிலின் அழகிய கட்டமைப்பையும், சமுதாயத்தின் வளர்ச்சிக்காக அங்கு மேற்கொள்ளப்படும் தேவார வகுப்புகள், இந்து சமயக் கல்வி மற்றும் நூலகம் போன்ற சேவைகளையும் டத்தோ சிவகுமார் பாராட்டினார்.
விழா நிறைவில், சுப்ரமணியம் தலைமையிலான கோயில் நிர்வாகத்தினர், மஹிமா உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்து, பேரவையில் இணைவதற்கான தங்களின் உறுதிப்பாட்டைக் தெரிவித்தனர்