Latestமலேசியா

லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ப்பாட்டங்களில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை; விஸ்மா புத்ரா தகவல்

லாஸ் ஏஞ்சலஸ் – ஜூன்-13 – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.

வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியது. என்றாலும் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள மலேசியப் பேராளரகம் வாயிலாக அங்குள்ள நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அது கூறியது.

அம்மாநகரில் உள்ள மலேசியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றி நடந்துகொள்வதோடு, விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.

குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் நிகழும் இடங்களை விட்டு தள்ளியே இருக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கள்ளக்குடியேறிகளுக்கு எதிரான அதிபர் டோனல்ட் டிரம்பின் கடுமையான சட்ட அமுலாக்கங்களை எதிர்த்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

இதனால் லாஸ் ஏஞ்சலஸின் மையப் பகுதியில் ஒரு மைல் சதுர பரப்பளவில் இரவு 8 மணி தொடக்கம் காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீறுவோர் கைதுச் செய்யப்படுவோர் வருகின்றனர்.

மலேசியப் பேராளரகமும் ஊரடங்குச் சட்டத்திற்குட்பட்ட இடத்தில் இருந்தாலும் அது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!