
இஸ்லாமாபாத், ஏப்ரல்-27- 26 பேரை பலிகொண்ட ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு சந்தேக நபரின் வீட்டை, இந்திய இராணுவம் குண்டு வீசி தகர்த்துள்ளது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள வட காஷ்மீரில் Farooq Ahmad Tadwa-வின் வீடு தரைமட்டமானது.
48 மணி நேரங்களில் இதுவரை 6 பயங்கரவாதிகள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளை குண்டு வீசி தகர்த்துள்ளோம்; சந்தேக நபர்கள் சிக்கும் வரை இந்த அதிரடி தொடரும் என இராணுவப் பேச்சாளர் கூறினார்.
ஸ்ரீ நகரில் நேற்று சுமார் 60 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு அத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஆயுதங்கள், ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் போன்றவற்றைக் கைப்பற்றுவதையும் அச்சோதனைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதனிடையே, பஹல்காம் பள்ளத்தாக்கு தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் மீது இந்தியா அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளின் செயலுக்கு பாகிஸ்தானைக் குறைக் கூறுவதை இந்தியா நிறுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
அத்தாக்குதல் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்துவதில் இந்தியாவுக்கு உதவ இஸ்லாமாபாத் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் எனக் கூறி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக இரத்து செய்தது உள்ளிட்ட 5 அதிரடி முடிவுகளை புது டெல்லி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.