Latestமலேசியா

விபத்தில் காரில் இருந்து வெளியே விழுந்த பெண் மரணம்

கோலாலம்பூர், ஜூன் 16 – ஜோகூர் பாரு, , ஜாலான் Pantai – Lido
சாலையின் 4 ஆவது கிலோமீட்டரில் இன்று பள்ளி வேனுடன் கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து அதிலிருந்து வெளியே விழுந்த பெண் உயிரிழந்தார். 30 வயதுடை பெண் ஓட்டிச் சென்ற கார் 60 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற வேனில் மோதியது. இதனைத் தொடர்ந்து அப்பெண் சாலையின் இடது புறம் விழுந்ததில் இறந்தார்.

தலையில் கடுமையான காயத்திற்கு உள்ளான அப்பெண் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார் என தென் ஜொகூர்பாரு போலீஸ் தலைவர் ரவ்ப் செலமாட் தெரிவித்தார். அந்த பெண் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து இடது புறம் ஒரு வேனில் மோதியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார். அந்த வேனுக்குள் இருந்த மாணவர்களும் வேன் ஓட்டுனரும் காயம் அடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!