
ஹனோய், ஜூன் 30 – வியட்நாமில் 15 வயது சிறுமி ஒருவர் பருக்களை பிழிந்து, அங்கீகரிக்கப்படாத வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முகப்பருக்களைப் பிழிந்து எடுத்து, அங்கீகரிக்கப்படாத க்ரீமை பயன்படுத்தியதால், பரு காயங்களின் வழியாக க்ரீமில் இருந்த பாக்டீரியா பாதிக்கப்பட்டவரின் உடலில் அதிவேகமாக பரவி, அவரது மூளை மற்றும் நுரையீரலை சேதப்படுத்தி அப்பெண்ணுக்கு மரணத்தை விளைவித்துள்ளது.
உடனடி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற இயலவில்லையென்று உள்ளூர் மருத்துவத்துறை விளக்கமளித்துள்ளது.
மேலும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணவும், கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும், தெரியாத தோற்றம் அல்லது உள்ளடக்கம் கொண்ட முகப்பரு சிகிச்சைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.