
கோலாலம்பூர், மே-29 – அண்மைய ஆண்டுகளில் நீதிமன்ற படியேறிய மிக முக்கியமான விவாகரத்து வழக்கொன்றில், முன்னாள் மனைவிக்கு 10.5 மில்லியன் ரிங்கிட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Shan என்றழைக்கப்படும் பெரும் தொழில் அதிபரான தனது முன்னாள் கணவருக்கு எதிராக Chan எனும் மாது தொடுத்த வழக்கில், அவருக்கு ஆதரவாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருமணம் “கவர்ச்சியாகவும் உற்சாகமாகவும், ஆடம்பரமாகவும், சாகசத்துடனும் தொடங்கியது”, ஆனால் பின்னர் துரோகம் மற்றும் உணர்ச்சி ரீதியான பிரிவினை குற்றச்சாட்டுகளாக மோசமடைந்ததை, 167 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக் காட்டினார்.
வெளியில் மனமொத்த தம்பதியாக பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், அவர்களின் திருமணம் நீண்ட காலமாகவே நொறுங்கிவிட்டதை நீதிமன்றம் கண்டறிந்தது.
துரோகம், பொறாமை மற்றும் அவநம்பிக்கை போன்ற குற்றச்சாட்டுகளால் திருமண பந்தம் முறிவடைந்துள்ளது.
மனுதாரரான Chan, திருமண உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய எவ்வளவோ முயற்சித்துள்ளார்; ஆனால் கணவரின் செயல்கள் அதற்கு இடம்கொடுக்கவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே பல்வேறு செலவுகளைக் கணக்கிட்டு மொத்தமாக அந்த 10.56 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை நீதிமன்றம் நிர்ணயித்தது.
தவணை முறையில் 2027 டிசம்பருக்குள் அம்முழுத் தொகை செலுத்தப்பட வேண்டும்.
மாதம் 35,000 ரிங்கிட் வீதம் 16 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டு 6.72 மில்லியன் ரிங்கிட்டை மொத்தமாக வழங்குவதும் அதிலடங்கும்.
80 நாட்களுக்கும் மேல் நடைபெற்ற வழக்கில் 26 சாட்சிகள் சாட்சியமளித்து, 16,000 -க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.