
சென்னை, ஜூன்-10 – தமிழகத்தின் தூத்துக்குடியில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் தந்தை கண்டிக்கப் போய், அது பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது.
தந்தை கண்டித்ததால் மனவேதனைக்கு ஆளான 20 வயது கார்த்தி பிரியா, விஷம் குடித்து உயிரையே விட்டுள்ளார்.
பெற்றோர் வெளியில் சென்ற சமயம் பார்த்து கார்த்தி பிரியா விஷம் குடிந்து மயங்கிக் கிடக்க, திரும்பி வந்தவர்கள் உடனடியாக அவரை அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மாணவி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரை விசாரித்து வருகின்றனர்.