
கோலா சிலாங்கூர், மே 24 – நேற்றிரவு, கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம் (MPKS), பண்டார் புஞ்சாக் அலாம் பகுதியிலிருக்கும் வெளிநாட்டவர்கள் நடத்தும் வளாகங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இப்பரிசோதனை, அமலாக்கத் துறை, உரிமம் வழங்கும் துறை, சுகாதாரத் துறை, கோலா சிலாங்கூர் மாவட்ட சுகாதார அலுவலகம் (PKD) மற்றும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தைச் (SSM) சேர்ந்த 42 அமலாக்கப் பணியாளர்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.
வணிக எண்கள் இல்லாமலும், சட்டபூர்வ அனுமதி மற்றும் வளாக உரிமம் இல்லாமலும், வெளிநாட்டவர்கள் வணிகம் செய்து வருவது கண்டறியப்பட்டு, சம்மன்கள், வணிக உரிம ரத்து மற்றும் வளாக மூடல் உத்தரவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வெளிநாட்டு தொழிலாளர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது