Latestமலேசியா

ஷா ஆலாமில் கைப்பேசிக் கடையில் 60,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை; சந்தேக நபர் சிக்கினான்

ஷா ஆலாம்- மே-21,

சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 16-ல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கைப்பேசிகளை விற்கும் கடையை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் தொடர்பில், ஓர் ஆடவன் கைதாகியுள்ளான்.

ஏப்ரல் 7-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் முன்னதாக புகார் செய்திருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு கடையைத் திறந்த போது, சில மின்னியல் சாதனங்களும் தொடர்பு கருவிகளும் கொள்ளையிடப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

CCTV கேமரா பதிவைப் போட்டுப் பார்த்த போது, சுவாசக் கவசமும் தலையில் ஹெல்மட்டும் அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து, பொருட்களோடு Honda City காரில் தப்பியோடியதைக் கண்டதாக போலீஸ் புகாரில் கூறினார். பொருட்கள் கொள்ளையிடப்பட்டதில் அவருக்கு 60,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், 33 வயது சந்தேக நபரை கோலாலம்பூர் புடுவில் கைதுச் செய்தது. கூட்டுக் களவாணியான அவனது சகாவைத் தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!