Latestமலேசியா

100,000 ரிங்கிட் மதிப்பிலான ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைது

பத்து பஹாட், ஜூன்-28 – ஜோகூர் பத்து பஹாட்டில் காரை உடைத்து 100,000 ரிங்கிட்டும் மேல் மதிப்பைக் கொண்ட ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைதாகியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தாமான் சீனார் பெர்லியானில் உள்ள வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த காரை, இரவு 9.30 மணி வாக்கில் ஏதேச்சையாக பார்த்த போது, காருக்குள் அனைத்தும் அலங்கோலமாக கலைந்துகிடந்தன.

இதனால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

அச்சத்தில் விலையுயர்ந்தப் பொருட்களை அவர் தேடிய போது, அந்த ரோலேக்ஸ் கை கடிகாரமும் 700 ரிங்கிட் ரொக்கமும் காணாமல் போனதைக் கண்டு அவர் போலீஸில் புகாரளித்தார்.

விசாரணையில் இறங்கியப் போலீஸார் ஜூன் 25-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு 27 வயது சந்தேக நபரை தாமான் ஸ்ரீ வங்சாவில் உள்ள ஒரு வீட்டில் கைதுச் செய்தனர்.

திருடப்பட்ட கை கடிகாரமும் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர், போதைப்பொருள் குற்றம் உட்பட மொத்தம் 14 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

சம்பவத்தின் போதும் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவன் விசாரிக்கப்படுகிறான்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!