Latestமலேசியா

திருக்கோயில் & சமயக் கல்லூரித் திட்டத்திற்காக சைவ அறவாரியம் நடத்திய மாபெரும் மொய்விருந்து

ஷா ஆலாம், மே-11 – சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியம் தனது திருக்கோயில் மற்றும் சமயக் கல்லூரித் திட்டத்திற்காக மாபெரும் மொய்விருந்து ஒன்றை நடத்தியது.

நேற்றிரவு 7.00 மணி முதல் சிலாங்கூர் ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இவ்விருந்து நிகழ்வு நடைபெற்றது.

ஆயிரம் பேர் பங்கேற்ற இவ்விருந்தில், விழாக் குழுத் தலைவர் சிவத்திரு ரவிசந்திரன் சுப்ரமணியம், சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் தலைவர் Dr நாகப்பன் ஆறுமுகம், மலேசிய சைவ சமயப் பேரவை Dr பழனியப்பன் எட்டி கவுண்டர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ரவிசந்திரன் தமதுரையில், வரும் நன்கொடைகள் பெரும் மாற்றத்திற்கான பெருங்கடலில் இணையும் பங்களிப்புகள் என வருணித்தார்.

சைவக் கல்லூரி அமைப்புக்கு, 2012-ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிட்டு, ஈராண்டுகளுக்கு ஒரு முறை பேரவை, மாநாடு நடத்தி தொடர் திட்டங்களை வகுத்து வருவதாக, Dr பழனியப்பன் கூறினார்.

Dr நாகப்பன், சைவைக் கல்வி, நன்னெறி பண்புகள் மற்றும் நற்சிந்தனை தொட்டு பேசினார்.
இவ்விருந்தில் முதன்மை நன்கொடையாக HMSK Architecture 200,000 ரிங்கிட்டை வழங்கியது.

Knowledge Group of Companies 100,000 ரிங்கிட்டும் Prima Rakan Sdn Bhd நிறுவனம் 100,000 ரிங்கிட்டும் வழங்கின.

இத்திருப்பணியில் முதல் கட்டமாக, ஆகமநெறி வழுவாமல் ஒரு சைவத் திருக்கோயில் அமைகிறது.

இந்துக்களின் திருமணம், சமயக் கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்த ஏதுவாக 2 மாடிகளில் பலநோக்கு மண்டபம் ஒன்றும் அமைகிறது.

இரண்டாம் பகுதியில், தங்கு விடுதியுடன் கூடிய சமயக் கல்லூரி அமைகிறது.

மூன்றாம் பகுதியாக 1200 பேருக்கான மாநாட்டு மண்டபம் ஒன்றும் அமைக்கப்படும்.

சிலாங்கூர் மாநில அரசின் அனுமதியுடனும் மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடனும் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் செயல்பட்டு வருகின்றன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!