
புக்கிட் ஜாலில், ஜூன் 7 – கடந்த புதன்கிழமை,புக்கிட் ஜாலில் அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவனின் தாய் மற்றும் மாமாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த, 25 மற்றும் 27 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்கள், குழந்தைகள் சட்டத்தின் இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்று செராஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடில் போல்ஹாசன் (Aidil Bolhassan) தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தந்தை மலேசியர் என்று முதல் கட்ட விசாரணையில் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில், அக்குழந்தை பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தாலும், சம்பவத்திற்கான காரணம் விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.