
அமெரிக்கா, ஜூன் 17 – இம்மாத தொடக்கத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை, ஆப்கானிஸ்தான், ஹைட்டி மற்றும் ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கு பயணத் தடை அறிவித்ததைத் தொடர்ந்து மேலும் 36 நாடுகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பயணத் தடை விதிக்கப்படவிருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தான்சானியா, கம்போடியா, கிர்கிஸ்தான், செயிண்ட் லூசியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் வனுவாட்டு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வெளிநாட்டினர் தங்களது சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் அமெரிக்கா தங்களது கொள்கைகளை தொடர்ந்து மறு மதிப்பீடு செய்யுமென்று அறிவித்துள்ளது.