Latestமலேசியா

4.16 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 5,000 போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல்

கோலாலம்பூர், ஜூலை-2 – கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் ஜூன் 30-ல் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 5,051 போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மதிப்பு 4.16 மில்லியன் ரிங்கிட்டாகும்.

கோலாம்பூரில் கெப்போங், சிலாங்கூரில் பண்டார் பாரு பாங்கி மற்றும் ஜோகூரில் பத்து பஹாட்டில் 7 இடங்களில் நடத்தப்பட்ட அந்த Op Taring Bravo 3 சோதனையில் 6 ஆடவர்கள் கைதாகினர்.

அவர்களில் இருவர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள்; நால்வர் வெளிநாட்டினர் ஆவர்.

முன்னதாக, செகாம்புட்டில் ஒரு டேரஸ் வீட்டிலும் நூற்றுக்கணக்கான போலி சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Walther P99 இரக கைத்துப்பாக்கி Raifal M4, Carbine, Colt AR-15 உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.

இது தவிர்த்து Raifal Heckler, Koch MP5 துப்பாக்கிகள், CZ , Glock 17, San Viper, Browning கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இணையம் வாயிலாக பொது மக்களுக்கு விற்பதற்காக அந்த போலி சுடும் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

சோதனையிடப்பட்ட வணிகத் தளங்களும் ஊராட்சி மன்றங்களின் உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை.

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த போலி சுடும் ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிச் செய்யவும், இச்சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் கூறியது.

இணைய வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அதே வேளை, பொது மக்களும் இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டால் புகாரளிக்குமாறு போலீஸ் கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!