
கோலாலம்பூர், ஜூன் 10 – ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து , ஸ்ரீ கெம்பங்கன் (R&R) ஓய்வுப் பகுதியிலிருந்து புக்கிட் ஜாலில் நோக்கிச் செல்லும் Maju விரைவுச் சாலையில் (MEX) வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை மணி 6.30 அளவில் அந்த விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக Sepang Viral முகநூலில் தெரிவிக்கப்பட்டது. சாலையின் வலது மற்றும் நடுவே வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களும் பக்கவாட்டில் நகர்த்தப்பட்டுள்ளன. எனினும் சைபர்ஜெயா, புத்ராஜெயா மற்றும் Sepang நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நிலைமை இன்னும் நெரிசலில் உள்ளன.