
கோலாலம்பூர், மே 27 – கடந்த ஏப்ரல் மாதம், வெளியிடப்பட்ட ஏழு புத்தகங்கள், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தியிருப்பதால், மலேசிய உள்துறை அமைச்சு (KDN), அதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து வெளியீடுகளும், நல்லொழுக்கத்திற்கு எதிரானவை என்பதால், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது ஒழுக்கத்திற்கு பாதிப்பு தரும் இப்புத்தகங்களின் உரிமையாளர்கள், அச்சு அச்சகங்கள் மற்றும் வெளியீட்டுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது 20,000 ரிங்கிட்டுக்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படுமென்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.