Latestமலேசியா

726 ஏய்ம்ஸ்ட் மாணவர்களுக்கு RM18 மில்லியன் MIED-யின் உபகாரச்சம்பளம்; தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்

கல்வியே வாழ்க்கையின் வெற்றிக்கான திறவுகோல்.

அதை உணர்ந்தே ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ SA விக்னேஸ்வரன் அடிக்கடி கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.

அதற்கேற்ப ம.இ.காவின் கல்வி கரமான MIED மூலமாக நம் மாணவர்களுக்கு ஏராளமான கல்வி உதவிகள் அவரது முயற்சியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் 726 பேருக்கு MIED கல்வி உபகாரச்சம்பளத்தை தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கியுள்ளார்.

கெடா, பெடோங்கில் அமைந்துள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக campus வளாகத்தில் நேற்று அவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

ஏய்ம்ஸ்ட் இயக்குநர் வாரிய உறுப்பினர் டத்தோ செல்வ குமார் மூக்கையா, MIED இயக்குநர் வாரிய உறுப்பினர்களான டத்தோ எம். அசோஜன், தான் ஸ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ பி.கமலநாதன், ஏய்ம்ஸ்ட் துணை வேந்தர் Dr கதிரேசன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முழு உபகாரச்சம்பளம், பகுதி உபகாரச்சம்பளம் என மொத்தமாக 18 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது.

ஆக அதிகமாக foundation படிப்புகளுக்கு 194 பேருக்கும், மருத்துவப் படிப்புக்கு 168 பேருக்கும், மருந்தகப் படிப்புக்கு 81 பேருக்கும், பல் மருத்துவத்துக்கு 78 பேருக்கும் உபகாரச்சம்பளம் வழங்கப்பட்டது.

1984-ஆம் ஆண்டிலிருந்து MIED கல்வி நிதியாக 216 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, அதன் வழி 14,000 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக, தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமதுரையில் குறிப்பிட்டார்.

மாணவர்கள் குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இன – கட்சி பாகுபாடின்றி இந்த MIED கல்வி உபகாரச்சம்பளம் வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு 30,000 ரிங்கிட்டிலிருந்து 60,000 ரிங்கிட் வரை நிதி வழங்குவதன் மூலம் படிப்புக்கான செலவுகளையும் குடும்ப சுமையையும் குறைக்க முடிந்துள்ளது.

இந்த நிதி ஆதரவானது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்துவதற்காக அல்ல; மாறாக MIED – ஏய்ம்ஸ்ட் தோற்றுநர் துன் சாமிவேலு வகுத்த பாதையில், கல்வி மூலமாக இளையத் தலைமுறையின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

MIED கல்வி உபகாரச்சம்பளம் பெற்ற மாணவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு மேற்கல்வி வழங்கும் இடம் மட்டுமல்ல; மாறாக, மாணவர்களின் நலன்களுக்கும் கூடுதல் அக்கறையோடு முன்னுரிமை அளிக்கும் ஸ்தாபனமாகும். MIED கல்வி உபகாரச்சம்பளத்தின் வாயிலாக இது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!