
புத்ராஜெயா, ஏப்ரல் 24- இன்று துருக்கி இஸ்தான்புல்லை உலுக்கிய 6.2 மக்னிதுட் (magnitud) அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
இஸ்தான்புல் மர்மாரா கடலில், மதியம் ஏற்பட்ட இச்சம்பவத்தில் அருகிலுள்ள பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டு, குடியிருப்பாளர்கள் பீதியடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறினர் என்று துருக்கிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்தது.
தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கம் 4.9 மக்னிதுட் (magnitud) அளவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலைமையைத், தொடர்ந்து கண்காணித்து வரும் விஸ்மா புத்ரா, துருக்கியிலுள்ள மலேசியர்களை விழிப்புடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியது.