
ஷா ஆலாம், மே 21- நேற்றிரவு ஷா ஆலாம் மைதானத்தின் அருகே கேட்கப்பட்ட, பட்டாசு வெடி சத்தத்தைக் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில், சந்தேக நபர்கள் யாரும் பிடிபடவில்லை என்று ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது இக்பால் இப்ராஹிம் (Assistant Commissioner Mohd Iqbal Ibrahim) கூறியுள்ளார்.
மேலும், வணிக கடைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றை பரிசோதித்து, அங்குள்ள பொதுமக்களையும் விசாரித்ததில், அவர்களும் அவ்வெடிச்சத்தத்தை கேட்டுள்ளதாக, தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அங்குள்ள பஜாருக்கு அருகில், சிலர் பட்டாசுகளுடன் விளையாடுவதையும் வெடிப்பதையும், அப்பகுதி மக்கள் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், உடனே ஷா ஆலயம் காவல் நிலையத்தைத் தொடர்புக் கொள்ள வேண்டுமென, இக்பால் கேட்டுக் கொண்டார்.