Latestமலேசியா

பி.கே.ஆர் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் கிடையாது; பிரதமர் உறுதி

புத்ராஜெயா, மே-22 – இவ்வாரக் கடைசியில் நடைபெறும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படாது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.

இது கட்சித் தேர்தல்; இதன் முடிவுகளுக்கும் அமைச்சர் பொறுப்புகளுக்கும் தொடர்பில்லை.

என்றாலும், அமைச்சர் பதவியிலிருந்து யாராவது விலக விரும்பினால் அதைத் தாம் தடுக்கப் போவதில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.

புத்ராஜெயாவில் உள்ளூர் வெளியூர் ஊடகங்களின் தலைமை செய்தியாசிரியர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் பேசினார்.

பி.கே.ஆர் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியுற்றால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன் என பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி முன்னதாகக் கூறியிருந்தார்.

அதே சமயம், துணைத் தலைவராக வெற்றிப் பெற்று, ஒருவேளை அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதை நிராகரிப்பேன் என, ரஃபிசியை எதிர்த்து போட்டியிடும் நூருல் இசா அன்வார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இருபெரும் தலைவர்கள் நேரடி பலப்பரீட்சையில் ஈடுபடுவதால் பி.கே.ஆர் தேர்தல் களைக்கட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!