
புக்கிட் ஜாலில் ஜூன்-6 – கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 30-ஆவது மாடியிலிருந்து விழுந்து, 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
நேற்று காலை 11 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்ததாக செராஸ் போலீஸ் தலைவர் அய்டில் போல்ஹசான் கூறினார்.
குழந்தையின் உடல் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் வேளையில், தற்போதைக்கு திடீர் மரணமாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த குழந்தையின் அருகில் அமர்ந்து உறவினர் ஒருவர் கதறும் 37 வினாடி வீடியோ முன்னதாக வைரலாகியிருந்தது.