
லிபிஸ், ஜூன் 6 – நேற்றிரவு, லிபிஸ்,ஜாலான் லிங்காரன் தெங்கா உத்தாமாவின் (LTU), 30வது கிலோமீட்டரில், மலேசிய ஜியோமதிக்கா பல்கலைக்கழகத்தில் (Universiti Geomatika Malaysia) பயின்று வரும் தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாகி, 56 வயதான முகமது ருசி மோ யூசோஃப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த அவருடைய மகன் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தற்போது லிபிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், இஸ்மாயில் மான் கூறியுள்ளார்.
இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் அனைத்து சாலை பயனர்களும் எப்போதும் கவனமாகவும், விவேகத்துடன் வாகனம் ஓட்டவும், தங்களது வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும் காவல்துறை அறிவுறுத்துகின்றதென்று இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.