
நிபோங் திபால், ஜூன்-23 – நிபோங் திபால் அருகே பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் பயணிக்கும் பாதையில் காரோட்டிச் சென்ற 70 வயது மூதாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
பத்து காவானிலிருந்து பத்து மாவோங் செல்லும் சாலையின் 8.6-ஆவது கிலோ மீட்டரில் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
வைரலான அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் அம்மூதாட்டியை அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
அனுமதிக்கப்படாத பாதையில் வாகனமோட்டியதன் பேரில் அவர் மீது விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் செல்லும் பாதையில் Proton X50 காரை அம்மூதாட்டி ஓட்டிச் சென்ற 6 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.