Latestமலேசியா

அனைத்து ஊழல் குற்றச்சாட்டுக்களிலும் சைட் சாடிக் விடுதலை

புத்ரா ஜெயா, ஜூன் 25 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சரான சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான்
( Syed Sadiq Syed Abdul Rahman ) இன்று அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

டத்தோ Ahmad Zaidi Ibrahim தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், Syed Sadiq கின் மேல்முறையீட்டை அனுமதித்து, அவரது தண்டனை, ஏழு ஆண்டு சிறைத்தண்டனை, 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் மற்றும் இரண்டு பிரம்படிகளை ரத்து செய்தது. மேல் முறையீட்டின் இதர அமர்வு நீதிபதிகளாக Datuk Azman Abdullah மற்றும் Datuk Noorin Badarudin ஆகியோரும் இருந்தனர்.

அப்போதைய பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் அர்மடா எனப்படும் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த Syed Saddiq , பெர்சத்து துணை பொருளாளர் Rafiq Hakim Razali யுடன் உடந்தையாக அந்த அமைப்பின் நிதியில் 1 மில்லியன் ரிங்கிட் சமபந்தப்பட்ட நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் Syed Sadiq மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் மற்றும் சட்ட கூறுகளை முறையாக மதிப்பீடு செய்யத் தவறியதால் உயர் நீதிமன்றம் தவறு செய்ததாகக் மேல் முறையீட்டு நீதிபதி Datuk Noorin Badarudin தெரிவித்தார்.

ஒருவரிடம் பணத்தை எடுக்கச் சொல்வது, அறிவுறுத்துவது அல்லது கட்டளையிடுவது போன்ற செயல் பணத்தை அகற்றுவதாகக் கருத முடியாது. பணத்தை திரும்பப் பெறும் செயல், குற்றத்தின் உடல் ரீதியான செயலை (actus Reus) பூர்த்தி செய்யாது என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!