Latestமலேசியா

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க உரிமையாளர்கள் சுயேட்சையான குத்தகையாளர்களை நியமிக்கலாம்

கோலாலம்பூர், ஜூன் 26 – சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ்ஸில்
ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சுயேச்சையான குத்தகையாளர்களை நியமிக்கும் சுதந்திரம் வீட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

30,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாத செலவுக்கான இந்த வசதி வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் ஊராட்சி மன்றத்தின் மூலம் மாநில அரசாங்கத்திற்கு பழுதுபார்க்கும் பணிக்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட வீடுகளின் மறுகட்டமைப்பு செலவுகள் 30,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருந்தால் அதன் பணியை மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குத்தகையாளர்களான சைம் டார்பி சொத்துடமை நிறுவனம் அல்லது ஷாரிக்காட் பெருமஹான் நெகாரா பெர்ஹாட் (SPNB) கையாள்வார்கள் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. அனைவரும் ஒரே உரிமைகோரல் முறையைப் பயன்படுத்துகின்றனர். புத்ரா ஹைட்ஸில் 30,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலான செலவுகளுக்கான சேதங்களை கொண்ட வீடுளின் மறுகட்டமைப்பு நடவடிக்கையை அப்பகுதியின் வீடமைப்பு மேம்பாட்டாளரான சைம் டார்பியால் கையாளப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!