Latestஉலகம்

மக்களே ஜாக்கிரதை; தவறான நேரத்தில் தாய்லாந்தில் மது அருந்தினால், இனி RM1,200 அபராதம் அல்லது சிறைதண்டனை

பேங்கோக், நவம்பர்-9, தாய்லாந்தில், அரசாங்கம் நிர்ணயித்த நேரத்திற்கு வெளியே மது அருந்துவது இனி சட்டவிரோதமாகும்.

விதிமீறினால் 10,000 Baht அதாவது 1,200 ரிங்கிட்டை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.

அல்லது 6 மாத சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும்.

மதுபான விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட நேரங்கள் – காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரையாகும்.

இந்த நேரங்களுக்கு வெளியே, உணவகங்கள், கடைகள், அல்லது மதுபான Bar-களில் கூட மது விற்பனை செய்ய முடியாது.

பொது மக்களோடு, சுற்றுப்பயணிகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஒழுக்கம் மற்றும் பொது பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசாங்கம் கடுமையாக அமுல்படுத்த முனைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!