
பாலிக் பூலாவ், பிப்ரவரி-23-பினாங்கு, பத்து மாவுங்கில் உள்ள ஒரு கராவோக்கே இசை விடுதியில் கைதான 36 பேர், விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 34 பேர் மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஆடவர்களும் பெண்களுமாவர்; எஞ்சிய இருவர் உள்ளுர்வாசிகள்.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக 22 முதல் 40 வயது வரையிலான அவர்களைத் தடுத்து வைக்க, பாலிக் பூலாவ் மேஜிஸ்திரே நீதிமன்றம் உத்தரவிட்டது.
2 மாடி கடை வீட்டில் செயல்பட்டு வந்த அந்த இசை விடுதி நேற்று நள்ளிரவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
வெளிநாட்டினரை குறி வைத்து அம்மையம் செயல்பட்டு வந்ததும், பணியாளர்கள் முறையான பயணப் பத்திரமின்றி இருந்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் அம்பலமானது.



