Latest

கோயம்புத்துர் வால்பாறையில் கோர விபத்து: மலைப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 9 கேரளா சுற்றுப்பயணிகள் பலி

கோவை, ஏப்ரல்-18,

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மலைப்பாதையில் நிகழ்ந்த கோர விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 9 சுற்றுப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், வால்பாறைக்கு சுற்றுலா வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள 13-வது வளைவில், எதிர்பாரா விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்புச் சுவரை மோதி உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.

​இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பள்ளி ஆசிரியர்கள் எனத் தெரியவந்துள்ளது.

​மீட்கப்பட்ட ஓட்டுநர் உட்பட 4 பேர் தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து மேல் விசாரணைகளை கோவை மாவட்ட போலீஸ் மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!