
கோலாலம்பூர், மே-28–கோலாலம்பூர் டேசா பண்டான் (Desa Pandan) பகுதியில் நடந்த விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து BMW கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஜாலான் கம்போங் பண்டான் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வந்த BMW காருடன் மோதி காயமடைந்தார்.
அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது உயிரிழந்தார்.
போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில் 44 வயதான கார் ஓட்டுநர் மது மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் இச்சம்பவம் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.



