Latestமலேசியா

Black torn டுரியான், லைச்சி, லொங்கான் மரக்கன்றுகளைக் கடத்தும் முயற்சி கிளந்தானில் முறியடிப்பு

ரந்தாவ் பாஞ்சாங், பிப்ரவரி-26 – தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ‘black torn’ வகையைச் சேர்ந்த 14,500 டுரியான் மரக் கன்றுகள், லைச்சி மற்றும் லொங்கான் செடிகளைக் கடத்தும் முயற்சி கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கில் முறியடிக்கப்பட்டுள்ளது.

கம்போங் பாரிட் ஆயிரில் சந்தேகத்திற்குரிய வகையிலிருந்த ஒரு லாரியை, பொது நடவடிக்கைப் படை PGA நிறுத்திய போது, மொத்தமாக 1,000 ‘black thorn’ டுரியான் மரக் கன்றுகள், 8,000 லைச்சி செடிகள், 5,500 லொங்கான் செடிகள் பிடிபட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு 1.12 மில்லியன் ரிங்கிட்டாகும்.

Op Taring Wawasan சோதனையின் போது கைப்பற்றப்பட்ட அச்செடிகள், பூச்சிப் பிடித்தும் நோயுற்றும் இருந்தன.

லாரி ஓட்டுநரான 36 வயது ஆடவரும் கைதானார்.

சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட மரக் கன்றுகளும் செடிகளும் 1976-ஆம் ஆண்டு தாவரத் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக ரந்தாவ் பாஞ்சாங் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக PGA கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!