Latestமலேசியா

KLIA-வில் நெரிசலைக் குறைக்க அமுலுக்கு வரும் QR குறியீட்டு முறை

செப்பாங், ஜனவரி-2, KLIA விமான நிலையத்தில் குடிநுழைவுச் சோதனையை விரைவுப்படுத்தும் முயற்சியாக, இம்மாதம் தொடங்கி QR குறியீடு பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்படும்.

மலேசியர்களுக்கு பிரத்தியேகமாக 40 சிறப்புப் பாதைகளில் அந்த QR குறியீடு பயன்பாட்டுக்கு வருமென, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.

KLIA 1, KLIA 2 என 2 முனையங்களிலும் புறப்படும் மற்றும் வந்திறங்கும் பகுதிகளில் அச்சிறப்புப் பாதைகள் அமைக்கப்படும்.

இந்த QR குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் வாயிலாக குடிநுழைவு சோதனை 5 முதல் 7 வினாடிகளில் முடிந்து விடும்.

இதுவே வழக்கமான autogate முறையென்றால், அதற்கு 15 முதல் 25 வினாடிகள் பிடிக்கும்.

இதன் மூலம் நுழைவாயில்களில் குறிப்பாக உச்ச நேரங்களின் போது நெரிசலைக் குறைக்க QR குறியீடு பெரிதும் உதுவுவதாக அமைச்சர் சொன்னார்.

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுதுவதால் வலுவான பாதுகாப்பு அம்சங்களையும் அது கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

QR முறையின் கீழ் பயணிகள் தங்களின் கடப்பிதழ் புத்தகத்தை வெளியில் எடுக்கத் தேவையிருக்காது.

என்றாலும், பயணம் நெடுகிலும் கடப்பிதழை அவர்கள் கட்டாயம் உடன் கொண்டுச் செல்ல வேண்டும்.

என்னதான் QR முறை அமுலுக்கு வந்தாலும், manual சோதனை முகப்பிடங்களும், autogate வசதியும் வழக்கம் போல் பயன்பாட்டில் இருந்து வருமென ஃசைபுடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!