Latestமலேசியா

MIPP கட்சியின் ‘இந்தியர் ஒற்றுமை விழா’; ‘ரிசெட் 2027’ இலக்குத் திட்டம் அறிமுகம்

ஷா ஆலாம், மே-5- பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, நேற்று ‘இந்தியர் ஒற்றுமை விழா’வை மிகச் சிறப்பாக எற்பாடு செய்திருந்தது.

சிலாங்கூர், ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்ற அவ்விழாவுக்கு, பெரிக்காத்தான் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் சிறப்பு வருகை புரிந்தார்.

பெஜுவாங் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதீர்,மலேசியத் தமிழ், தெலுங்கு, சீக்கிய மற்றும் மலையாளச் சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் இவ்விழா நடத்தப்பட்டது.

MIPP கட்சியின் தலைவரும் பெரிக்காத்தான் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவருமான புனிதன், ஒற்றுமையும் கலாச்சாரமும் கட்டிக் காக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

2027 பொதுத் தேர்தலுக்கு முன் இந்தியச் சமூகத்தின் ஆதரவை பெரிக்காத்தான் கூட்டணிக்குக் கவர்ந்திழுக்கும் நோக்கில், ‘ரிசெட் 2027’ தூரநோக்கு இலக்குத் திட்டம் குறித்தும் அவர் பேசினார்.

கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இந்தியர்களின் மேம்பாட்டை அத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இவ்வேளையில், முன்னாள் பிரதமரான டான் ஸ்ரீ முஹிடின் யாசின் சிறப்பு வருகை புரிந்திருந்தார்.

MIPP கட்சியின் முதல் பெரிய விழாவான இதில், பாஸ் கட்சி பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான், கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டோமினிக் லாவ், மலேசிய தெலுங்கு, மலையாள மற்றும் சீக்கிய சமூகச் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

சுமார் 800 பேர் பங்கேற்ற இவ்விழாவில் பரதநாட்டியம், தெலுங்கு நடனம் மலையாளிகளின் கதக்களி, பஞ்சாபி நடனம் உள்ளிட்டவையும் படைக்கப்பட்டன.

விழாவுக்கு வந்திருந்த பொது மக்கள் சிலர்
‘இந்தியர் ஒற்றுமை விழா’ குறித்த தங்களின் மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!