Latestமலேசியா

MyKad அட்டை விண்ணப்பத்திற்கு மூக்குத்தியைக் கழற்றி விபூதியை அழிக்கச் சொல்வதா? JPN மீது இந்தியப் பெண் புகார்

கோலாலம்பூர், ஜூன்-7 – தொலைந்துபோன MyKad அடையாள அட்டைக்கு மாற்று அட்டைப் பெறுவதற்காக, புத்ராஜெயாவில் உள்ள தேசியப் பதிவிலாகாவான JPN சென்ற இந்திய மூதாட்டி அங்கு மோசமாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மே 28 சம்பவத்தில், மூக்குத்தியைக் கழற்றுமாறும் நெற்றியில் விபூதியை அழிக்குமாறும் தனது தாயார் பெரியக்கா ராமசாமி அங்குள்ள பணியாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, பிரமீளா அரசு தனது ஃபேஸ்புக் பதிவில் அதிருப்தி தெரிவித்தார்.

ஓர் இந்து குடிமகளை அவரின் மத அடையாளத்தை அழிக்கச் சொல்லி JPN அதிகாரிக்கு யார் அதிகாரம் கொடுத்தது என பிரமீளா கேள்வி எழுப்பினார்.

“இதற்கு முன் நான் கூடத் தான் நெற்றியில் குங்குமத்தோடு MyKad அட்டையை மாற்றச் சென்றேன்; அப்போது அதை அழிக்கச் சொல்லி யாரும் என்னை கேட்கவில்லையே?” என்றார் அவர்.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஓர் அரசு அதிகாரி இப்படித் தான் நடந்துகொள்வதா எனக் கேட்ட பிரமீளா, சமய நம்பிக்கைகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட உரிமையும் உத்தரவாதமும் என்னவாயிற்று என கேட்டார்.

முஸ்லீம் அல்லாதோரின் உணர்ச்சிகளை மதிக்காத இச்செயலை அரசு ஊழியரே செய்வது ஏற்புடையதாக இல்லை;

எனவே இது குறித்து JPN உனடியாக விளக்கமளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பிரமீளாவின் பதிவு வைரலாகி, ஏராளமானோர் JPN விளக்கமளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!