Latestமலேசியா

SME அனைத்துலக நல்லெண்ண கோல்ஃப் 2025 மகத்தான வெற்றி

கோத்தா கெமுனிங், ஜூன்-19 – மலேசிய SME சங்கம், அதன் முதன்மை நிகழ்வான 2025 SME அனைத்துலக நல்லெண்ண கோல்ஃப் போட்டியை வெற்றிகரமாகவும் பெருமையுடனும் நிறைவுச் செய்துள்ளது.

Kota Permai Golf & Country Club-பில் நடைபெற்ற இப்போட்டி, 120-க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கொடையாளர்களை, ஒரு பொதுவான நல்ல நோக்கத்திற்காக ஒன்றிணைத்தது.

கௌரவ விருந்தினராக வந்த இலக்கவியல் துணை அமைச்சர் டத்தோ வில்சன் உகாக் அனாக் கும்போங் போட்டியைத் தொடக்கி வைத்தார்.

அவர் தனது உரையில், தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டை முன்னெடுப்பதில் SME வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.

“இந்நிகழ்வு மீள்தன்மை, இரக்கம் மற்றும் கூட்டாண்மை என மலேசியர்களின் சிறந்த பண்பை பிரதிபலிக்கிறது; இது போன்ற தளங்கள் மூலம்தான் நாம் SME-க்களை மேம்படுத்த முடியும்; அதே நேரத்தில் தேவைப்படும் சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்ட முடியும்” என டத்தோ வில்சன் உகாக் கூறினார்.

போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50% தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

எஞ்சிய 50% தொகை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி முயற்சிகளை ஆதரிக்க SME மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்படும்.

நிகழ்வை வெற்றிகரமாக மாற்றிய அனைத்து நிதி ஆதரவாளர்கள், கோல்ஃப் வீரர்கள் மற்றும் பங்காளிகளுக்கும் மலேசிய SME சங்கத்தின் தலைவர் டாக்டர் சின் சீ சியோங் நன்றித் தெரிவித்தார்.

“இப்போட்டி கோல்ஃப் பற்றியது மட்டுமல்ல; மாறாக எங்கள் SME சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பது மற்றும் எங்கள் வெற்றியை மிகவும் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வது பற்றியது” என்றார் அவர்.

வெவ்வேறு குழிகளிலிருந்து போட்டியாளர்கள் ஏக காலத்தில் shot-gun tee off அங்கம், தொடர்பை வளர்த்துகொள்வதற்கான நெட்வொர்க்கிங் மதிய உணவு, விருது வழங்கல்களுடன் கூடிய பிரமாண்டமான இரவு உணவு மற்றும் தொண்டு காசோலை விழா உள்ளிட்ட ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக இது நடைபெற்றது.

இந்தத் தொண்டு நிகழ்வை தாக்கம் மிக்கதாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றுவதில் பங்கு வகித்த அனைத்து நிதி ஆதரவாளர்கள், பங்காளிகள், மற்றும் தன்னார்வலர்களுக்கும் மலேசிய SME சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆறுமுகம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!