Latest

Sprint நெடுஞ்சாலை பயங்கரம்: கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபருக்கு 26 மாத சிறைத்தண்டனை

கோலாலம்பூர், ஜூன்-4-Sprint நெடுஞ்சாலையில் கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

​நேற்று முன்தினம் காலை டாமான்சாரா லிங்க், Jalan Setiapuspa வெளியேற்றம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

ஆடம்பர மஸராட்டி (Maserati) கார் உட்பட பல வாகனங்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகின.

​இந்தச் சம்பவத்தில் தங்களது வாகனங்கள் பலத்த சேதமடைந்ததாகக் கூறி 6 வாகனமோட்டிகள் புகார் அளித்துள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் கூறியது.

இதனால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 20,000 ரிங்கிட்டுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கார் கண்ணாடி உடைந்ததில் ஓர் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

​சம்பவ இடத்திலேயே அந்தச் சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து கற்கள் நிரம்பிய இடுப்புப் பை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்கோல் ஜோடி பறிமுதல் செய்யப்பட்டன.

​ஏற்கனவே 8 குற்றப் பின்னணிகள் மற்றும் ஒரு போதைப்பொருள் வழக்கைக் கொண்டுள்ள அவ்வாடவர், குற்றவியல் சட்டத்தின் கீழ் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

​இதனைத் தொடர்ந்து அவருக்கு 26 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் கைதுச் செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த தண்டனைக்காலம் தொடங்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!