
கோலாலம்பூர் – ஜூன்-15 – ஜூலை 1 முதல் SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விதிப்பு விரிவாக்கம் காண்பதன் மூலம், B40 – M40 குடும்பங்களைச் சேர்ந்த 5.4 மில்லியன் மக்கள் பயனடைவர்.
கருவூலத்தின் தலைமைச் செயலாளர்
டத்தோ ஜோஹான் மஹ்மூட் மெரிக்கான் அவ்வாறு கூறியுள்ளார்.
இப்புதியக் கொள்கையின் வாயிலாக அரசாங்கத்தின் வருவாய் அதிகரித்து, அதனை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு வழங்க முடியும் என்றார் அவர்.
SARA எனப்படும் Sumbangan Asas Rahmah உதவித் திட்டத்தின் மூலம் இது மக்களுக்கு போய் சேரும்.
மாதத்திற்கு 50 முதல் 200 ரிங்கிட் வரையிலான இந்த SARA உதவியின் மூலம் மக்கள் MyKad அட்டையைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
அதே சமயம் SST விரிவாக்கத்தின் தாக்கங்களிலிருந்து B40, M40 வர்கத்தினரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே SST விரிவுப்படுத்தப்பட்டுள்ளதே அதற்கு சான்று என ஜோஹான் மஹ்மூட் கூறினார்.
இதனால் B40, M40 குடும்பங்களின் தினசரி செலவினங்கள் பாதிக்கப்படாது என்றார் அவர்.