
பட்டவொர்த், மே-19 – பினாங்கு, பட்டவொர்த் ஜாலான் ராஜா ஊடாவில் உணவக வாடிக்கையாளரைத் பாராங் கத்தியால் வெட்டிய சந்தேகத்தில், 30 வயதிலான இருவர் கைதாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தனது நண்பருடன் காரில் வந்து இறங்கிய 41 வயது ஆடவரை, முகமூடி அணிந்திருந்த மூவர் பாராங் கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இரத்த வெள்ளத்தில் ஒருவழியாக அருகிலுள்ள தனியார் கிளினிக்கிற்கு அவர் தப்பியோடினார்.
பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டவரின் உடல் நிலை, தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது சந்தேக நபருக்கு எதிரான தேடுதல் வேட்டைத் தொடருவதாக, செபராங் பிறை உத்தாரா இடைக்கால போலீஸ் தலைவர் சி. தர்மலிங்கம் கூறினார்