Latestமலேசியா

பெர்லிஸிலில் இறால் வேட்டைக்குச் சென்ற மீனவர் மின்னல் தாக்கி பலி

கங்கார், மே-17 – பெர்லிஸ், கங்கார் சிம்பாங் அம்பாட்டில் இறால் வேட்டை முடிந்து திரும்பும் வழியில் படகை மின்னல் தாக்கியதில், ஒரு மீனவர் உயிரிழந்தார்.

குவாலா சுங்கை பாடாங்கில் உள்ள பெர்லிஸ் கரையோரத்தில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

மரணமுற்றவர் 28 வயது Muhamad Faiez Othman என அடையாளம் கூறப்பட்டது.

சம்பவத்தின் போது மின்னல் படகைத் தாக்கியதும் அவர் சுருண்டு விழுந்தார்; அருகில் இருந்த நண்பர் பதறிப் போய் படகின் இயந்திரத்தை நிறுத்தி விட்டு கரையிலிருந்த இதர மீனவ நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

அவர்களின் துணையுடன் அம்புலன்ஸ் வண்டியில் முதலில் கிளினிக்கிற்கும் பின்னர் துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனைக்கும் அந்நபர் கொண்டுச் செல்லப்பட்டார்.

எனினும் அவர் இறந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!