கோலாலம்பூர், டிச 19 – கோத்தா கினபாலு வட்டாரத்தில் சீனி பற்றாக்குறை மிகவும் மோசமாகியுள்ளதால் இந்த விவகாரத்திற்கு உடனடி தீர்வு காண வேண்டுமென கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனி பற்றாக்குறை தொடர்பாக பயனீட்டாளர்கள் மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகர்களும் கவலை தெரிவித்துள்ளதாக வாரிசான் கட்சியின் உதவித் தலைவரும் தஞ்சோங் அரு சட்டமன்ற உறுப்பினருமான ஜுன்ஸ் வோங் தெரிவித்தார். ஒரு கிலோவுக்கு 2 ரிங்கிட் 85 சென் விற்பனை செய்யப்படும் வரும் பிளாஸ்டிக் பையில் உள்ள சீனி கிடைப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக அவர் கூறினார்.
அப்படியே இருந்தால்கூட மளிகைக் கடைகளில் ஒரு கிலோ சீனி 4 ரிங்கிட் 50 சென் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் ஜுன்ஸ் வோங் தெரிவித்தார். கோத்தா கினபாலுவில் சீனிக்கான தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அதோடு சீனி அதன் விலையையும் நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜுன்ஸ் வோங் கேட்டுக்கொண்டார்.