Latestமலேசியா

திடீரென நின்ற காரின் கதவு திறக்கப்பட்டதில் மோட்டார் சைக்கிள் மோதியது தாய் மரணம் மகன் காயம்

கோலாலம்பூர், ஜூன் 17 – ஜாலான் ஈப்போ 5ஆவது மைலில் உள்ள சமிக்ஞை விளக்கு சந்திப்புக்கு அருகே சாலை ஓரத்தில்
திடீரென நிறுத்தப்பட்ட காரின் கதவு திறக்கப்பட்டதால் அதில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் இறந்ததோடு அவரது மகன் காயம் அடைந்தார். அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த 55 வயது பெண் காயத்திற்கு உள்ளாகி கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மரணம் அடைந்தாக கோலாலம்பூர் குற்ற விசாரணைத் துறை மற்றும் போக்குவரத்து அமலாக்க பிரிவின் தலைவர் துணை கமிஷனர் முகமட் சம்சுரி முகமட் இசா ( Mohd Zamzuri Mohd Isa ) தெரிவித்தார்.

அப்பெண்ணின் 20 வயது மகன் தனது தாயாரை ஏற்றிக் கொண்டு ஜாலான் ஈப்போவிலிருந்து கெப்போங் சாலை சுற்றுவட்டத்தை
நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது. 35 வயதுடைய ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற Toyota Vios கார் திடீரென சாலையோரத்தில் நின்றதைத் தொடர்ந்து அக்காரின் கதவு திறக்கப்பட்டதால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாமல் காரின் கதவில் மோட்டார் சைக்கிளோட்டி சாலையில் விழுந்ததோடு பின்னால் அமர்ந்திருந்த அவரது தாயார் சாலையின் வலது புறத்தில் சென்ற ஒரு லோரியின் அடியில் சிக்கிக் கொண்டதாக முகமட் சம்சுரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!