
கோலாலம்பூர், மே 6 – 10 மாதத்திற்கு முன் வாங்கப்பட்ட SUV மின் வாகனத்தில் மலாக்காவிலிருந்து பினாங்கிற்கு சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் ,அந்த வாகனம் நெடுஞ்சாலையில் திடீரென சொந்தமாக பிரேக் போட்டு நின்றதால் அதில் பயணம் செய்த அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மே மாதம் 1 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த தனது பயங்கரமான அனுபவத்தை அந்த வாகனத்தின் உரிமையாளரான 33 வயதுடைய இஸ்வான் ஹசான் , சமூக
வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
செராஸ் – காஜாங் நெடுஞ்சாலையில் விரைவாக செல்லும் வலது புற தடத்தில் அந்த வாகனத்தை ஒரு மணி நேரத்திற்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றபோது இந்த விபரீதமான அனுபவம் ஏற்பட்டதாக இஸ்வான் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு எச்சரிக்கை அல்லது அடையாளத்தையும் தெரிவிக்காமல் திடீரென சொந்தமாக பிரேக் போட்டு நின்ற அந்த வாகனத்தின் Skrin முகப்பில் Power System Failure என்ற தகவல் மட்டுமே காட்டியது.
அந்த வாகனத்தின் நான்கு டயர்களும் பூட்டு போடப்பட்டதைத்போல் எதுவும் நகரவில்ல. சாலையின் வலதுபுற தடத்தில் திடீரென வாகனம் நின்றதால் கிட்டத்தட்ட பல கார்கள் அதனை மோதும் சூழ்நிலையை எதிர்நோக்கியதால் தாம் பெரும் அச்சத்திற்கு உள்ளானதாக இஸ்வான் பதிவிட்டுள்ளார்.
வாகனத்தின் கியரை Neutral நிலைமைக்கு மாற்றினாலும் நான்கு டயர்களும் பூட்டப்பட்டதைப்போல் செயல்படாமல் இருந்தன. சம்பவம் அந்தி வேளையில் நடந்ததாலும், சேவை மையம் ஏற்கனவே மூடப்பட்டிருந்ததாலும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காப்புறுதி நிறுவன இழுவை வண்டி வந்து வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றது.
இதனால் தனது பயணத்தை திட்டமிட்டபடி தொடரமுடியாமல் போனதோடு தனது வாகனத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முறையான பதில் பழுதுபார்க்கும் சேவை மையம் ( Pusat Servis ) தரப்பிடமிருந்து கிடைக்காமல் போனதால் தாம் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானதாக இஸ்வான் பதிவிட்டுள்ளார்.