பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 – நோன்பு மாதம் தொடங்கும் தேதியை நிர்ணயிக்க, எதிர்வரும் மார்ச் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அதற்கான பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெறும் என அரசு முத்திரை காப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரமலான் நோன்பு மாதத்தின் தொடக்கத்திற்கான தேதி ‘ருக்யா’ மற்றும் ‘ஹிசப்’ அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஒப்புக்கொண்டதாக அரசு முத்திரை காப்பாளர் அலுவலகத்தின் தகவல் பிரிவு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இந்நிலையில், நாடு முழுவதிலும் 29 இடங்களில் பிறையை பார்க்கப்படுன் என்றும், பிறை கண்டதும் ரமலான் மாதத்திற்கான நோன்பு தொடக்க நாள் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் அரசு முத்திரை காப்பாளர் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.