Latest

கூலாயில் நான்காம் படிவ மாணவி கல்வத் குற்றத்திற்காக கைது

கூலாய், அக்டோபர்-1,

ஜோகூர் கூலாயில் உள்ள ஹோட்டல்களில் மாநில சமயத் துறை நடத்திய சோதனைகளில், நான்காம் படிவ மாணவி ஒருவரும் கல்வத் குற்றத்திற்காக கைதானார்.

ஹோட்டல் அறைக் கதவை திறந்த போது 17 வயது அம்மாணவியும், 20 வயதிலான அவரின் ஜோடியும் அதிகாரிகளிடம் சிக்கினர்.

அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைதான 3 ஜோடிகளில் இவர்களும் அடங்குவர்.

மற்ற 2 ஜோடிகளும் இந்தோனேசிய, மியன்மார் நாட்டவர்கள் ஆவர்.

இதையடுத்து ஜாமீனில் எடுப்பதற்காக, அம்மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.

கல்வத் குற்றத்தில் வயது குறைந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் ஈடுபடுவது கவலையளிப்பதாக சமயத் துறை அதிகாரிகள் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!