கோலாலம்பூர், ஜன 30 – தேசிய முன்னணியுடனான தற்போதைய ஒத்துழைப்பு 16-ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னரும் தொடரும் என DAP நம்புவதாக அக்கட்சியின் தலைமை செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்திருக்கிறார். தற்போது இவ்விரு கட்சிகளுக்கிடையே மனப்பூர்மான அல்லது உண்மையான ஒத்துழைப்பு நீடித்து ஒற்றுமை அரசாங்கத்திலும் தொடர்வதாக அவர் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் உண்மை உணர்வோடு தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை தொடர வேண்டும் என போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் தெரிவித்தார்.
அரசியலை குறைத்துக்கொண்டு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தவேண்டும் என பேரரசர் சுல்தான் அப்துல்லா தெரிவித்த ஆலோசனையை DAP-யும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளும் வரவேற்பதாக அவர் கூறினார். அந்த உணர்வோடு 16 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் எங்களது ஒத்துழைப்பு தொடரும் என அந்தோனி லோக் கூறினார். DAP-யுடனான ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியும் தெரிவித்திருந்தார் .