சென்னை, மே 14 – பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மனைவியும், பாடகியுமான சைந்தவியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரும், சைந்தவியும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
அவர்களுக்கு நான்கு வயதில் அன்வி எனும் பெண் குழந்தை உள்ளார்.
திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் பிரிந்து வாழ்வதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன.
அதனை தொடர்ந்து, அவர்களின் விவாகரத்தை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது X சமூக ஊடகம் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“நீண்ட யோனைக்கு பின், எங்களின் 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து சமரசமாக பிரிய முடிவுச் செய்துள்ளோம். எங்களின் மன நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ஊடகங்களும், நண்பர்களும் இந்த நேரத்தில் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என ஜி.வி. பிரகாஷ்குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பு, அவரது இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.